Monday, 30 September 2013

பூமிகாவின் சுய விளம்பரம்!


ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்து பேசப்பட்டவர் பூமிகா. ஆர்ப்பாட்டமாக இல்லையென்றாலும் அமைதியான முறையில் சில காலம் கோலிவுட்டில் இடம்பிடித்திருந்த அவர், பின்னர் தெலுங்குக்கு சென்று நடித்தவர் யோகா மாஸ்டரை திருமணம் செய்து கொண்டு பட தயாரிப்பிலும் இறங்கினார்.

கணவர் தனது சினிமா கேரியருக்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தி வருவதால் இப்போதுவரை தெலுங்கு படங்களில் கிடைக்கிற வேடங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் பூமிகா.

இந்த நிலையில், மீண்டும் தமிழில் நடிப்பதற்கு சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்த பூமிகா, தற்போது தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தான் நடித்துள்ள களவாடிய பொழுதுகள் திரைக்கு வர தயாராகி வருவதால் தான் ரீ-என்ட்ரி கொடுக்க இதுதான் சரியான நேரம் என்று சில இயக்குனர்களை சந்தித்து வாய்ப்புக்கேட்கத் தொடங்கியிருக்கிறார்.

அதோடு, களவாடிய பொழுதுகள் சாதாரண படமல்ல, இதுவரை எந்த மொழியிலும் வெளிவராத கதையுடன்கூடிய உணர்ச்சிக்குவியல்.

இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கு மனதளவில் பெரிய திருப்தி கொடுத்த படமும்கூட.

இந்த படம் வந்தபிறகு இந்தமாதிரி கதைகளிலும் படம் இயக்க முடியுமா? இப்படியும் நடிக்க முடியுமா? என்று உங்கள் அனைவரையும் அப்படம் ஆச்சர்யப்பட வைக்கும் என்றும் சுய விளம்பரம் செய்தும் வருகிறார் பூமிகா.

0 comments:

Post a Comment