Recent Posts

Saturday, 1 February 2014



புதிய தகவல்கள் என்று மணிரத்னம் படத்தைக் குறித்து எழுத நமக்கும் ஆசைதான். அதற்கான சந்தர்ப்பத்தை மணிரத்னம் ஒருபோதும் உருவாக்குவதில்லை. தவிர்க்க முடியாத நேரத்தில் அவரின் படம் குறித்த செய்தி கவிப்பேரரசின் வாயிலாக வெளிவரும். இந்தமுறை அவரும் கப்சிப்.

மணிரத்னம் படத்தைக் குறித்த புதிய யூகங்கள் இவை.

மணிரத்னம் தனது புதிய படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்குகிறார். மகேஷ்பாபு ஹீரோ. நாகார்ஜுன், ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்கள்.

இந்த ஸ்கிரிப்டை அவர் ஐஸ்வர்யா ராயிடம் தந்ததாகவும், அதில் ஐஸ்வர்யா ராய்க்காக மணிரத்னம் உருவாக்கிய கதாபாத்திரம் அவரை மிகவும் கவர்ந்ததாகவும், ஐஸ்வர்யா ராயின் ரீ என்ட்ரியாக இந்தப் படம் இருக்கும் எனவும் யூகங்கள் தொடர்கின்றன.

இன்னும் சில தினங்களில் யூகங்கள் தகவல்களாக மாற வாய்ப்புள்ளது.

மணிரத்னம் படம் - புதிய யூகங்கள்



சிவ கார்த்திகேயனுக்கு தம்பி அந்தஸ்து தந்து, எதிர்நீச்சல் படத்தை அவருக்காக தயாரித்து அதில் ஒரு ஆட்டமும் போட்டவர் தனுஷ். காலசக்கரம் கண்ணிமைப்பதற்குள் தனுஷைவிட உயரத்தில் சிவ கார்த்திகேயனை தூக்கி வைத்தது. அது விதியின் திருவிளையாடல்.

தனுஷ் படத்தில் ஒரு பாடலுக்கு சிவ கார்த்திகேயன் ஆடுகிறார் என்பது சமீபத்திய கிசுகிசு.

வேல்ராஜ் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ். பெயருக்குதான் வேல்ராஜ் ஷாட் வைப்பதும், ஸ்டார்ட் சொல்வதும் தனுஷ்தானாம். தெரியாம மாட்டிக்கிட்டோமே பரிதவிப்பில் வேல்ராஜ்

போகட்டும் அது நமக்கு தேவையில்லை. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு தனுஷுடன் அனிருத், சிவ கார்த்திகேயன் ஆடவிருக்கிறார்களாம். படத்துக்கு இசையும் அனிருத்தான்.

தனுஷ் கேட்டால் சிவ கார்த்திகேயன் மறுக்கவா போகிறார்?

தனுஷ் படத்தில் அனிருத், சிவ கார்த்திகேயன்?



இந்திய பேட்டிங்கும் சாயம் வெளுத்தது பற்றி நாம் குறிப்பிட்டிருந்தோம், செய்தியாளர்களும் தோனியிடம் அதைப்பற்றி கேட்டபோது இப்போது அணியில் இருக்கும் பேட்ஸ்மென்கள் மீது நிறைய முதலீடு செய்துள்ளோம், செட்டில் ஆன பேட்டிங் லைன் அப் மீது எத்ரனியினர் பாய்வார்கள், இப்போது இந்தக் காலக்கட்டத்தில் இருக்கிறொம். என்கிறார் தோனி.

கோலி, கேப்டன் தோனி தவிர ஒருவருக்கும் பந்து பேட்டில் படவில்லை. அப்படியே பட்டலும் அது அவுட் ஆவதாக உள்ளது. இல்லையேல் நின்று ஆடுகிறோம் என்று ஒரே அறுவை. இதிலிருந்து என்ன தெரிகிறது அந்தன்கப் போட்டிக்கான திட்ட வரயரை இல்லை என்பதே தெரிகிறது.

சரி.. தோனி என்ன கூறினார் என்று கேட்போம்:

"சர்வதேச கிரிக்கெட்டில் இந்தக் கட்டம் அனைவருக்கும் வருவதே. (இது ஒரு கட்டமாக இருந்தால் பரவாயில்லை. இதுவே கட்டமாக இருந்து கொண்டேயிருந்தால்). முதல் போட்டியை ஒருவர் ஆடி அது கிளிக் ஆகி தொடர்ந்து நன்றாக ஒரு வீரர் ஆடி வருகிறார் என்றால் பிறகு எதிரணியினர் அவரைக் குறிவைத்து விடுவர்.

இங்குதான் மோதல் வெடிக்கிறது. ஆனால் இது ஆரோக்கியமான மோதல். பிறகு எதிரணியினர் கொடுத்த பிரச்சனைகளை ஒருவர் தீர்த்துக் கொள்ளவேண்டும். எதிரணியினர் திட்டமிடுதல் செய்யவே செய்வார்கள். இதுதான் கிரிக்கெட், இது இப்போது இந்திய பேட்ஸ்மென்களுக்கு தொடங்கிவிட்டது.

இந்த சீசனின் துவக்கம் அபாரமாக இருந்தது. ஆனால் இப்போது பவுலர்கள் எங்கள் பேட்ஸ்மெனை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். திட்டமிடுகல் செய்கின்றனர். ஆனால் பயிற்சியில் எதிரணியினர் கொடுக்கும் பிரச்சனைகளை வீரர்கள் களைய முனைய வேண்டும். இதிலிருந்து வெளியே வர சிறந்த தீர்வு எது என்பதை தேர்வு செய்வதுதான் முக்கியம். தனித் தனியாக சவால்களுக்கு தீர்வு கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.


இந்த பேட்ஸ்மென்கள் மீது நிறைய முதலீடு செய்திருக்கிறோம், நான் முதலிலேயே கூறியதுபோல் ஒரு செட்டில்டு அணியாக இருக்கும்போது அதனை எதிரணியினர் திட்டமிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்துவர் இதுதான் கிரிக்கெட், அந்த காலக்கட்டத்தில் தான் இப்போது இருக்கிறோம்.

இந்த பேட்ஸ்மென்களிடம் இதிலிருந்து வெளிவரும் திறமை உள்ளது. ஆனால் பயிற்சியில் இவர்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். நிச்சயம் இவர்களிடம் உள்ள திறமைகள் இந்தச் சவால்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வரும்.

என்றார் தோனி.

சரி! எல்லோரும் திட்டமிடுகிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் தோனி. எதிரணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் திட்டம் ஏதேனும் உண்டா? இது கிரிக்கெட் ஆட்டத்தின் அடிப்படை, கேப்டன்சியின் அடிப்படை இது. இதை ஏதோ காலக்கட்டம் என்றெல்லாம் கூறி திசைதிருப்புதல் கூடாது.

'எதாயிருந்தாலும் 'பிளான்' பண்ணிச் செய்யணும்'



பாபா படத்தில் ரஜினி பிரபலப்படுத்திய பன்ச், கதம் கதம். முடிந்தது என்று இதற்கு அர்த்தம். நந்தா நடிக்கும் புதிய படத்துக்கு கதம் கதம் என்று பெயர் வைத்துள்ளனர்.

நந்தாவின் சினிமா கேரியர் உறுமிக் கொண்டிருக்கிறதே தவிர இன்னும் டேக்ஆஃப் ஆகவில்லை. அவரும் விதவிதமாக நடித்துத்தான் பார்க்கிறார். ஆனால் இந்த வருடம் ஏதாவது நடக்கும் போல் தெரிகிறது.

நந்தா நடிப்பில் புதிய திருப்பங்கள் என்ற படம் தயாராக உள்ளது. அதிதி படம் முடிவடையும் நிலையில். இப்போது புதிதாக கதம் கதம்.

இந்தப் படத்தில் நந்தாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம். போலீஸ்காரர்களுக்குள்ளே உள்ள மோதல்தான் படத்தின் கதை. தமிழுக்கு நிச்சயம் வித்தியாசமான ஸ்கிரிப்ட். ஹாலிவுட்டில் பல படங்களில் இந்த கதையம்சத்தை ஆழ உழுதிருக்கிறார்கள். (அதில் ஒன்றாக இப்படம் இருக்காது என்று நம்புவோம்).

பாபு தூயவன் படத்தை இயக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை தாஜ் நூர்.

நந்தாவின் கதம் கதம்



கொரில்லா பாஷை போல தோன்றும். ஆனால் இதுவொரு தமிழ்ப் பாட்டு. சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தில் இந்த அருந்தமிழ் பாட்டு குடி கொண்டுள்ளது.

இயக்குனர் என்.ராஜேஷ்குமாருக்கு நாக்கில் சுளுக்கு வந்தது போல் பெயர் வைப்பதில் விருப்பம். அதுதான் இப்படியொரு பெயரை தேர்வு செய்திருக்கிறார். குக்குக்கு குக்கிக்கிச்சு என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். படத்தின் கதை முழுக்க ரயிலில் நடக்கிறது.

மிதுன், மிருதுளா நடித்திருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக அனூப் அரவிந்த். படத்தின் கதை பெயர் அளவுக்கு சிக்கல் இல்லை. சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் ரயலில் நாயகனும், நாயகியும் பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் இருவருக்குள்ளும் ஏற்படும் ஈர்ப்பு படத்தில் பிரதானமாக வருகிறது.

விஜய் பெஞ்சமின் இசை. டி.ராஜேந்தரை பாட வைத்திருக்கிறார். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாடலின் முதல் வரியைதான் நீங்கள் செய்தியின் தலைப்பில் பார்த்தது. ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது...

உங்களை கிர் கிர்ருங்க வைக்க இந்த மாதம் படம் வெளியாகிறது.

ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது



சிவாஜியின் பாடலை மட்டும் பாடவில்லை. மற்றபடி அவரை மாதிரியே மயங்கிப் போயிருக்கிறது இது கதிர்வேலன் காதல் யூனிட்.

ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இது கதிர்வேலன் காதல் ஃபெப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கையில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களும் வெளியாகி ரசிகர்களை ஆர்வம் கொள்ள வைக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பாவாடை தாவணியில் ஆடியிருக்கிறார் நயன்தாரா. வில்லு படத்தில் வாடா மாப்பிள்ளை பாடலுக்கு பாவாடை தாவணி போன்றதொரு உடையில் நயன்தாரா ஆடியது நினைவிருக்கலாம். அவரின் ஆட்டத்துக்காகவே அந்தப் பாடல் பலரின் பேவரைட் பாடலாக இன்றும் திகழ்கிறது.

இது கதிர்வேலனின் காதலில் பாவாடை தாவணியில் அவர் போட்ட ஆட்டத்தில் மெய் மறந்ததாம் மொத்த யூனிட்டும். படத்தின் பொpய ப்ளஸ்ஸhக இந்த தாவணியாட்டம் இருக்கும் என்கிறhர்கள்.

வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் சன்னி லியோனும் சிறிது நேரம் பாவாடை தாவணியில் வருவது குறிப்பிடத்தக்கது.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...



அமெரிக்காவில் இறந்துபோன தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவரது பிள்ளைகள், அவரை அவருக்கு மிகவும் பிடித்த 'ஹார்லி டேவிட்சன்' பைக்கில் அமர்ந்தப்படியே புதைத்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், மெக்கானிக்ஸ்னர்க் பகுதியை சேர்ந்தவர் பில் ஸ்டான்ட்லி. 82 வயதான இவர் கடந்த வாரம் உடல் நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சிறு வயது முதல் பைக்கள் மீது பிரியமாக இருந்தவர், காலப்போக்கில் பைக்குகள் மீது அதீத நாட்டம் கொண்டார்.

அதிவேகமாக செல்லும் மிக விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் என்ற மோட்டார் சைக்கிளை வாங்கிய அவர் அதை எப்போதும் நல்லவிதமாக பராமரித்து வந்தார்.

தனது பிள்ளைகளிடம் எப்போதும், தான் இறக்கும் போது பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தவாரே புதைக்க வேண்டும் என கூறிவந்த ஸ்டான்ட்லி, அதுதான் அவருடைய இறுதியான ஆசை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்டான்ட்லி உயிரிழக்க, தந்தையின் ஆசையை நிறைவேற்றுவது என முடிவு செய்த அவரது பிள்ளைகள் அதற்காக அதிக பாரத்தை தாங்ககூடிய கண்ணாடி பேழையை தயார் செய்ததுடன், தாயாரின் சமாதிக்கு அருகே 3 கல்லறைகளுக்கான இடத்தை வாங்கினர்.

ஸ்டான்ட்லியின் உடலை 5 நிபுணர்கள் பதப்படுத்தி, அவரை அவருக்கு விருப்பமான 1967 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 'ஹார்லி டேவிட்சன்' பைக்கில் அமரவைத்து கண்ணாடி பேழைக்குள் இறக்கினர்.

ரேஸ் வீரர்கள் அணிவதைப் போன்ற லெதர் ஜாக்கெட், ஹெல்மெட், கூலிங் கிளாஸ் சகிதமாக ஸ்டான்ட்லியை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று கல்லறையில் அவரது பிள்ளைகள் புதைத்தனர்.

Harley Davidson-ல் அமர்ந்தப்படியே புதைக்கப்பட்ட முதியவர்



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதாக அவரது கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது. தனது கணக்கில் இருந்த ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டதால் லட்சுமண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் லட்சுமண் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்து மோசடி செய்தவர் கொல்கத்தா வாலிபர் என்று தெரிந்தது. அவரது பெயர் இஷாகல் ஷேக் (வயது32).

அவருக்கு கொல்கத்தா சால்ட்லேக் பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு இருந்தது. நீண்ட காலமாக அந்த வங்கி கணக்கை ஷேக் பராமரிக்கவில்லை. கடந்த புதன்கிழமை அவர் தனது வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் பணத்தை டெபாசிட் செய்தார்.

இதில் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் அந்த பணம் லட்சுமண் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

விவிஎஸ். லஷ்மண் வங்கிக் கணக்கில் மோசடி!



அமெரிக்காவில் தரையில் வீசி குழந்தையை கொலை செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த அதன் பெற்றோர் மற்றும் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 33). அவரது மனைவி தேன்மொழி (24). இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.

பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றபின்னர் குழந்தையை கவனித்துக்கொள்ள கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை அமர்த்தி இருந்தனர். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான். கடந்த 16-ந் தேதி குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

வீட்டில் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த கிஞ்ஜல் படேல், குழந்தையின் செயலை கண்டு கோபமடைந்தார். இதனால் ஆத்திரத்தில் குழந்தையை தரையில் வேகமாக வீசினார். இதில் குழந்தையின் தலை தரையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுதது.

உடனே படேல், சிவகுமாருக்கு போன் மூலம் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். வீட்டுக்கு விரைந்து வந்த சிவகுமார், குழந்தையை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையின் மண்டை ஓட்டில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

போலீசார் ஏற்கனவே இந்த வழக்கில் கிஞ்ஜல் படேலை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தையை தரையில் வீசி தாக்கியதை ஒப்புக்கொண்டார். கொலை நடந்த வீட்டையும் போலீசார் பூட்டுபோட்டு சீல் வைத்தனர்.

இந்த நிலையில் போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு இந்த வழக்கு தொடர்பாக குழந்தையின் பெற்றோர் தேன்மொழியும், சிவகுமாரும் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களையும் இந்த வழக்கில் கைது செய்தனர். குழந்தைக்கு பலத்த காயம் ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தரையில் வீசி குழந்தையைக் கொலை செய்த 3 பேர் கைது


அசின், அமலா பால், இனியா மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மலையாளத்தில் துக்கடா வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர்கள் தமிழ், தெலுங்கில் பிரபலமான பிறகே மலையாளத்தில் ஸ்டாராக அங்கீகரிக்கப்பட்டார்கள். இவர்களின் கரியர் தொடங்கியது மலையாளத்தில் என்றாலும் அங்கு நடிகைக்குரிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது தமிழ்ப் படங்கள்.

இனியாவின் நிலைமை இன்றும் மலையாளத்தில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முதல்முறையாக ஒரு பெரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

ஒரு சிபிஐ டைரி குறிப்பு மூலம் மலையாளத்தில் இன்வெஸ்டிக்கேட்டிங் த்ரில்லருக்கு அடித்தளமிட்டவர் இயக்குனர் மது. இந்தப் படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. ஐந்திலும் நாயகன் மம்முட்டி.

மதுவின் புதிய படத்தில் நடிக்க இனியா ஒப்பந்தமாகியிருக்கிறார். 2014 ல் இனியா மகிழ்ச்சி கொள்கிற நிகழ்வாக இருக்கிறது இந்தப் படம். வேறெhன்றுமில்லை... பார்க்கிறவர்களிடம் எல்லாம் மதுவின் இயக்கத்தில் நடிப்பதாக சொல்லி வருகிறார்.

மது இயக்கத்தில் இனியா



இப்போதைய பவுலர்கள் எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் சும்மா வந்து வீசுகிறார்கள் என்று ஆஸ்ட்ரேலிய முன்னாள் வேகப்பந்து மேதையும் தற்போதைய எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாதமியின் இயக்குனருமான கிளென் மெக்ரா மிகச்சரியாக கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பந்து வீச்சு குறித்து...

நான் அதிக போட்டிகளைப் பார்க்கவில்லை, எனவே கருத்து சொல்வது மிகையாகும். இந்தியாவில் பவுன்ஸ் இருக்காது, ஆனால் அயல்நாடுகளுக்குச் செல்லும்போது அந்தப் பிட்ச்கள் பவுன்ஸ் அளிப்பதைப் பார்த்து வேகப்பந்து வீச்சாளர்கள் கூடுதல் மகிழ்ச்சியடைந்து தேவையில்லாததையெல்லாம் பரிசோதனை செய்வர்.

ஆனால் அயல்நாடுகளில் பவுலர்கள் அதிகம் செய்யவேண்டியதில்லை, வேறு வேறு மாதிரி வீசிக்கொண்டேயிருக்கக்கூடாது.

இந்திய பவுலர்களின் வேகமின்மை காரணமா?

மிட்செல் ஜான்சன், டேல் ஸ்டெய்ன் இருப்பது எந்த ஒரு அணிக்கும் நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு லைன் லெந்த் அவசியம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. இந்த நாட்களில் நான் பார்க்கும் பவுலர்கள் சும்மா வந்து வீசுகின்றனர். திட்டமிடுதல் இல்லை. பந்து வீசி விட்டு விக்கெட்டுக்காக நம்பிக்கை வைக்கிறார்கள். திட்டமிடுதல் அவசியம்.

ஒருநாள் அணியில் ஜாகீர் கான் இடம்பெறாமை குறித்து...

ஒரு பவுலர் ஃபார்மில் இருக்கிறாரா அவரை உடனே அணியில் எடுத்துக் கொள்ளவேண்டும். இளம் வீச்சாளர்களுக்கு மூத்த வீரர் ஒருவருடன் விளையாடுவது பெரிய அனுபவம், மற்றும் மதிப்பு. ஒரு இளம் வீரருக்கு இதைவிட பெரிய பாடம் எதுவும் இருக்க முடியாது.

ஈஷ்வர் பாண்டே குறித்து...

இந்திய அணியில் அவரை பார்ப்பது பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்படாதது வெட்கக்கேடானது.


அவர் சரியாகவே வீசியிருப்பார் என்று நான் கருதுகிறேன். நான் ஈஷ்வர் பாண்டே பந்து வீச்சு மீது நம்பிக்கை வைத்துள்ளேன், விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவர் சிறப்பாக செயல் படுவார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு கூறினார் கிளென் மெக்ரா


இன்றைய பவுலர்கள் வந்து சும்மா போடுகிறார்கள் அவ்வளவே - கிளென் மெக்ரா!



சவுதி அரேபியாவில் கொலை செய்த இந்திய தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட இந்திய தொழிலாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது பெயர் முகமது லத்தீப். இவர் தன்னுடன் பணிபுரிந்த டாபர் பின் முகமது அல்-துஸ்காரி என்பவரை குத்தி கொலை செய்தார். பின்னர் பிணத்தை ஒரு கிணற்றில் வீசி மறைத்தார். முகமது லத்தீப்புக்கு முகமது - அல் - துஸ்காரி வேலை வாங்கி தந்ததாகவும், அது குறித்து இருவருக்கும் பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு தலை துண்டித்து நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியாவில் லத்தீப்பையும் சேர்ந்து இந்த ஆண்டு இதுவரை 3 பேரின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் 78 பேர் தலை துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதியில் இந்திய தொழிலாளர் தலை துண்டிப்பு



எங்கள் 'பிராண்டு' எப்போது மாறும் என்று தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. அருண் பாண்டியன் தமிழக சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

பேராவூரணி தொகுதி அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. நடிகர் அருண் பாண்டியன் சட்டசபையில் கேட்ட கேள்வி வருமாறு:-

பேராவூரணியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக விரைவு பேருந்துகள் இயக்கப்படுமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி:- ஓலைக்குடிசையில் வாழும் ஏழைகளையும், முன்னேற்ற ஓயாமல் சிந்தித்து செயலாற்றும் முதலமைச்சர் அம்மா ஆட்சியில் கடந்த 2½ ஆண்டுகளில் 1,426 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் விடப்பட்டு மக்கள் சேவையாற்றி வருகிறது.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பேராவூரணியில் இருந்து சென்னை வழித்தடத்தில் 1.9.2012 முதல் 242ஜி மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

நடிகர் அருண் பாண்டியன்:- எனக்கு அரசியல் அனுபவம் கம்மி. ஆனாலும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் 200 கேள்வி கேட்டாங்க. பதில் இல்லை என்கிறார்கள். ஆனால் நான் 10 கேள்வி கொடுத்தேன். 5 கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. எனவே இந்த அரசை பாராட்டாமல் எப்படி இருப்பது? தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க. அம்மா ஆட்சியை இந்தியாவே பாராட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நான் 6 மாதம் கழித்து பேருந்து விட கோரிக்கை வைத்திருந்தால் பேராவூரணியில் இருந்து டெல்லி வரை பேருந்து கிடைத்து இருக்கும்.

பாராளுமன்றத்துக்கு 534 ‘சீட்’ உள்ளது. ஆனால் கூட்டணி பற்றி பேசுபவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் 40 சீட்டை ஏற்கனவே மக்கள் அம்மாவுக்கு என முடிவு செய்து விட்டார்கள்.

வருகிற தேர்தலுக்கு பிறகு இந்த ஆட்சிதான் டெல்லியில் இருக்கும். உங்களால்தான் (ஜெயலலிதா) நாங்கள் உருவாக்கப்பட்டோம். ஆனால் இப்போது நாங்கள் வேறு பிராண்டில் (தேமுதிகவில்) இருக்கிறோம். அது எப்போது மாறும் என்று அருண் பாண்டியன் கேள்வியெழுப்பினார்.

எங்கள் பிராண்டு எப்போது மாறும் -அருண்பாண்டியன் கேள்வி



உணவின் எச்சமே சிறுநீரும், மலமும். இது மாட்டுக்கும் பொருந்தும். படித்தவர்கள் செய்யும் காரியமா இது?

நம் இரத்ததில் உள்ள வியாதி கிருமிகள் வெளிவரும் வழிதான் சிறுநீர். இதை எடுத்துச் சொல்ல வேண்டிய படித்த தலைமுறை பக்தியின் பெயரால் மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதை என்னவென்று சொல்லுவது?

இதுபோல தான் ஆந்திராவில் பசுக்களின் வாலைத் தூக்கி, அது சாணம் போடும் ஆசனவாயை தொட்டு வணங்கும் பழக்கம் உள்ளது.

இது போன்ற முட்டாள்தனமான காரியங்கள் ஏன் நடக்கின்றது. பக்தியின் காரணமாகத் தான். மாட்டை இந்த நாட்டின் புனிதப் பொருளாக மாற்றியதன் விளைவாகத் தான். புனிதப் படுத்தப்பட்ட எதுவும் அறிவு கொண்டு சிந்திக்க அனுமதிக்காத மூளைக்கு இடப்பட்ட விலங்கு.

எது ஒன்றையையும், எந்த மதம் சார்ந்த செயல்பாடுகளையும், எப்படிப்பட்ட நம்பிக்கைகளையும் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கு உட்படாதவரை மாடும், மனிதனும் ஒன்றுதான்.

பகுத்தறிவை விடுங்கள்! இவர்கள் அறிவை எங்கு அடகு வைத்தார்கள் என்று தெரியவில்லை. பக்தி வந்தால் புத்தி போகும் என்பது தமிழ்நாட்டு முதுமொழி.

"மனிதனுக்கு உயர்வு அவனின் ஆறாவது அறிவு". அறிவு கொண்டு சிந்திப்பீர்; ஆரோக்கிய வாழ்வு வாழ்வீர்!

மாட்டு மூத்திரம் குடிக்கும் மனிதர்கள் - பக்தியின் விபரீதம்!



மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டரை சோதனை செய்வதாக கூறி பெண் ஒருவரை இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மும்பையில் சமையல் எரிவாயு டெலிவரி வேலை பார்த்து வருபவர் சந்தன் ஜெய்வால். உத்தரபிரதேசத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன புதுமண தம்பதி ஒன்று மும்பை அருகே உள்ள அந்தேரி கிழக்கு பகுதியில் வசித்து வந்தனர்.

சமையல் எரிவாயு டெலிவரி செய்யும் சந்தன் ஜெய்வால் கணவன் வேலைக்கு சென்றதும் புதுமணப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளதை நோட்டம் விட்டு வந்து உள்ளான்.

சம்பவத்தன்றும் கணவர் வேலைக்கு சென்றதும் புதுப்பெண் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். இதைபயன்படுத்தி கொண்ட சந்தன் தனது நண்பன் முகமது ஆலம் என்பவனையும் அழைத்துகொண்டு புதுப்பெண்ணின் வீட்டிற்கு சென்று சமையல் எரிவாயு சிலிண்டரை சோதனை செய்ய வேண்டும் என கூறி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான்.

பின்னர் மயங்கிய நிலையில் இருந்த அப்பெண்ணிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய குற்றவாளிகளை, பெண்ணின் புகாரின்பீரில் போலீசார் கைது செய்துள்ளனர்

பெண்ணை பலாத்காரம் செய்த LPG டெலிவரி நபர்



ச‌ரித்திர பேராசிரியர். இந்த புதிய பட்டத்தை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு வழங்கியவர் கார்த்திகா நாயர்.

புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாமுடன் கார்த்திகா நாயரும் நடித்து வருகிறார். குலுமணாலியில் தொடங்கிய படப்பிடிப்பு ராஜஸ்தான், பீகார் என்று வடஇந்தியா முழுக்க நடக்கயிருக்கிறது.

கார்த்திகாவுக்கு இதில் போல்டான வேடம். சண்டையெல்லாம் போடுகிறார். டேப் டான்சும் இந்தப் படத்துக்காக புதிதாக கற்றிருக்கிறார். ஏஞ்சலினா ஜோலி நடிப்பில் வெளிவந்த லாரா கிராஃப்ட் படத்தின் சண்டைக் காட்சிகளை நினைவுப்படுத்துமாம் கார்த்திகா போடும் சண்டைகள்.

புறம்போக்கு வாய்ப்பை தந்ததற்காக ஏற்கனவே பலமுறை ஜனநாதனுக்கு நன்றி தெரிவித்தார். இப்போது அவருக்கு ச‌ரித்திர பேராசிரியர் என்ற பட்டமும் தந்திருக்கிறார் கார்த்திகா. வேறொன்றுமில்லை. அவ‌ரின் பொது அறிவை மெச்சி இப்படி அழைக்கிறார்.

யுடிவியுடன் இணைந்து ஜனநாதன் தனது பைன‌ரி நிறுவனம் சார்பில் புறம்போக்கை தயாரிக்கிறார்.

ஹிஸ்ட‌ரி புரஃபஸர் - ஜனநாதனுக்கு புதுப்பட்டம்



ரஷியாவில் உள்ள ஆண்களில் நான்கில் ஒரு பங்கினர் தங்களது 55ஆவது வயதிற்குள் இறப்பதாகவும், அதற்கு முக்கியமான காரணம் வோட்கா எனப்படும் ரஷ்ய மதுபானம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

‘தி லான்செட்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வில், ஒன்றரை லட்சம் ஆண்கள் கடந்த பத்து ஆண்டுகளில் மது அருந்திய அளவு கண்காணிக்கப்பட்டது.

இவர்களில், அதில் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள் மத்தியில், அதிக அளவில் அகால மரண விகிதங்கள் காணப்பட்டது.

இந்த இறப்புகளுக்கு, மது நச்சு, விபத்துகள், வன்முறை, தற்கொலை, மற்றும் தொண்டை மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஆகிய காரணங்களினால் மரணம் ஏற்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்பு விகிதங்கள் அரசியலில் மாற்றங்களினால் பாதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ரஷியாவில் கம்யூனிச வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலையினால் அதிகரித்த மதுப் பழக்கத்தினால் அதிகமான மக்கள் இறந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ரஷ்யர்களின் உயிரைக் குடிக்கும் வோட்கா



பிரான்சில் பனிச்சறுக்கில் ஈடுபட்டப்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எப். 1 சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் சிகிச்சையின்போது கண்களை திறந்து மூடியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, பனிச்சறுக்கின்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் பிரெஞ்சு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெரும் மைக்கேல் ஷூமேக்கருக்கு நினைவு மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளதாகவும், அவர் கண்ணைத் திறந்து மூடுவதாகவும், மருத்துவர்களின் சிகிச்சைக்கு நல்ல விதத்தில் ஒத்துழைப்பு தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பனிச்சறுக்கில் ஈடுபட்டபோது தவறி விழுந்த ஷூமேக்கரின் தலை பாறையில் மோதி அடிபட்டு பெரும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவர் கோமாவில் வீழ்ந்தார்.

அவரது உயிரைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினர். இதன் காரணமாக தற்போது அவரது உடல் நிலையில் சின்ன அளவில் முன்னேற்றம் தெரியத் தொடங்கியுள்ளது.

எனினும், ஷூமேக்கர் எப்போது முழுமையாக கோமாவிலிருந்து மீள்வார் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது எனவும், அதற்கு நீண்ட நாட்கள் ஆகலாமெனவும் நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக பிரெஞ்சுப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோமாவில் இருக்கும் ஷூமேக்கர் கண்களை திறந்து மூடினார்!




















The Super Singer Season 4. The entertainment channel that broadcasts in Tamil language has plans to bring the grand finale to audiences on all devices, be it television, desktops or mobiles. Claiming to be one of the biggest events in Tamil TV’s entertainment calendar, the Super Singer Season 4 grand finale show will be streamed live on TV, web and mobile on February 1, 2014.

Airtel Super Singer 4 Grand Final Watch It Live On www.techsatish.net | 01.02.14


10pm Speed News Night – Viraivuch Seithigal 01-02-2014 Puthiya Thalaimurai





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vani Rani 01-02-2014 - Sun Tv Serial | Vani Rani 01.02.14 | Vani Rani 01-02-2014 - Sun Tv Serial | Vani Rani | Vani Rani 01 Feb 2014 | Vani Rani 01 Feb 2014 | Vani Rani Sun tv Serial Online | Watch Vani Rani Sun Tv Serial Online | Vani Rani Episode 01 February 2014 | Vani Rani 01 Feb 2014 | Vani Rani Sun tv Serial Online | Watch Vani Rani Sun Tv Serial Online | Vani Rani Episode 263

Thendral : Promo 01/02/14



Zee tamil C.I.D. 31-01-14

Thiraiku Appal with Seenu Ramasamy Puthuyugam Tv

Paper Dosai (01/02/2014) Puthuyugam Tv





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH

Sun Tv Show Veeram - Sirappu Kanottam | Dt 01-02-14




MIRROR 2





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Thendral Sun Tv Serial - 01-02-14 | Thendral 01st Feb 2014 | Sun Tv Serial 01st Feb 2014 | Sun Tv Thendral 01st Feb 2014 | Sun Tv Serial Thendral 01-02-14 | Thendral 01.02.14 | Watch Thendral Serial 01st Feb 2014

Thendral Sun Tv Serial - 01-02-14 | Thendral 01st Feb 2014 | Sun Tv Serial 01st Feb 2014 | Sun Tv Thendral 01st Feb 2014 | Sun Tv Serial Thendral 01-02-14 | Thendral 01.02.14 | Watch Thendral Serial 01st Feb 2014


அமெரிக்காவில் ஒன்றரை வயது குழந்தையை தரையில் வீசி கொலை செய்த பணிப்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார்(வயது 33), அவரது மனைவி தேன்மொழி.

தமிழகத்தைச் சேர்ந்த இவர்களது 19 மாத குழந்தை ஆதியன். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கிஞ்ஜல் படேல்(வயது 27) என்ற பெண்ணை குழந்தையை கவனித்துக்கொள்ள அமர்த்தி இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 16ம் திகதி குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த படேல் குழந்தையை வேகமாக தரையில் வீசினார். இதில் குழந்தையின் தலையில் பலத்து காயமடைந்ததால், ரத்த வெள்ளத்தில் மிதந்தது.

இதனால் பயந்து போன படேல், சிவகுமாருக்கு போன் மூலம் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார், உடனடியாக வந்த சிவகுமார் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தும் எவ்வித பலனும் இல்லாமல் போனது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார், படேலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் படேல் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார், குழந்தைக்கு பலத்த காயம் ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்த பெற்றோர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அழுதுகொண்டிருந்த குழந்தையை தூக்கி வீசிய பணிப்பெண்: ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த பரிதாபம்

nadhes Nadhaswaram 08 01 2013 – Sun Tv Tamil Serial




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Nadhaswaram Sun Tv Serial 01-02-14 | Nadhaswaram 01st Febt 2014 | Sun Tv Serial 01st Feb 2014 | Sun Tv Nadhaswaram 01st Feb 2014 | Sun Tv Serial Nadhaswaram 01-02-14 | Nadhaswaram 01.02.14 | Watch Nadhaswaram Serial 01st Feb 2014





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Deivamagal Sun Tv Serial 01-02-14 | Deivamagal 01st Feb 2014 | Sun Tv Serial 01st Feb 2014 | Sun Tv Deivamagal 01st Feb 2014 | Sun Tv Serial Deivamagal 01-02-14 | Deivamagal 01.02.14 | Watch Deivamagal Serial 01st Feb 2014



Kajal Aggarwal family visits Sri Kalahasti temple | Sister Love Marriage



Vijay Compensated for Thalaivaa's Loss | Vendhar Movies , Chandra Prakash Jain



A Breakfast Time Big Cat Intruder



Armless Child Plays Trumpet




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH

Sun Tv Show Jilla - Sirappu Kanottam | Dt 01-02-14






PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Paasa Malar Sun Tv Serial 01-02-14 | Paasa Malar 01.02.14 | Paasa Malar 01/02/14 | Paasa Malar Serial Online | Sun Tv Paasa Malar Serial | Watch Paasa Malar Paasa Malar 01st Feb 2014 | Latest Episode Of Paasa Malar 01st Feb 2014 | Sun TV Serial Online Paasa Malar 01st Feb 2014 | Paasa Malar today Episode:97





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Mundhanai Mudichu Sun Tv Serial 01-02-14 | Mundhanai Mudichu 01st Feb 2014 | Sun Tv Serial 01st Feb 2014 | Sun Tv Mundhanai Mudichu 01st Feb 2014 | Sun Tv Serial Mundhanai Mudichu 01-02-14 | Mundhanai Mudichu 01.02.14 | Watch Mundhanai Mudichu Serial 01st Feb 2014






Captain Tv News 5pm 01-02-2014



Man slowly dies on the street





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS

Elavarasi Sun Tv Serial 01-02-14 | Elavarasi 01st Feb 2014 | Sun Tv Serial 01stFeb 2014 | Sun Tv Elavarasi 01st Feb 2014 | Sun Tv Serial Elavarasi 01-02-14 | Watch Elavarasi Serial 01st Feb 2014 | Elavarasi Episode:1036



2 Pounds of Dry Ice Experiment



The Prices of Important Medicines Has Arisen by 70 Percent in Last 8 years



Puthiya Thalaimurai's Guiding Program For +2 Students Held In Salem

Labels

tv serials (682) tv news (553) tv shows (437) cinema news (424) puthiya (243) Sun Tv Serials (233) captain (173) vijay tv shows (162) vijay tv serials (145) other (108) NEWS (106) cinema interviews (104) sun tv shows (99) singer (93) super singer 4 (93) raj tv serials (85) raadanserials (83) raj (82) cinema news (81) cooking (80) zeetamil (78) thanthi (76) zeetamil serials (76) suriayavanakkam (68) polimer tv serials (65) spiritual (63) captaintvnews (62) press meet (58) interviews (55) sun news (51) saregama (45) audio (44) events (36) diwali (34) recipes (34) eelam (33) vivathamedai (31) comedy (29) rasi (29) other shows (26) Tamil New Year 2013 Programs (24) vimarsanam (24) songs (23) yoga (23) Trailer (22) beautytips (22) solvathellamunmai (22) amazing (21) sathiyamtv (21) kaatrukkenna veli (20) home funny (19) pillai nila (19) health (18) koffee with suchi (18) mundhanai mudichu (18) sports (18) 2013 (17) Uravugal Thodarkathai (17) koppiyam (17) madhubala (17) Thendral (16) Valli (16) anjaraipetti (16) thayumanavan (16) Rudhra Veenai (15) crimestory (15) nadheswaram (15) puthuyugam (15) selvi (15) Bommalattam (14) Pattimandram (14) Saravanan Meenakshi (14) Sindhu Bairavi (14) achilvandhavai (14) chitthi (14) cinema seithigal (14) deivam thandha veedu (14) deivamagal (14) elavarasi (14) thangai (14) Chinna Papa Periya Papa (13) Devathai (13) Ponnunjal (13) annamalai (13) arasi (13) athu (13) homeminister (13) jayatv (13) kanavan (13) kedi boys killadi girls (13) magalirkaaga (13) manvasanai (13) mutharam (13) nalla neeram (13) politics (13) samayalmanthiram (13) sollungaboss (13) ullam kollai pogudhada (13) virunthinarpakkam (13) Azhagi (12) Sontha Bandham (12) atlas (12) dhinapalan (12) entertainment (12) luckkakickka (12) office vijay tv serial (12) puguntha veedu (12) seeman (12) aalayavazhipadu (11) karuthamma (11) mamiyaarthevai (11) maruthuvaneram (11) rani (11) sakthi (11) Sivam (10) bhama vijayam (10) captain tv shows (10) deivavazhipaadu (10) nigalvugal (10) saami potta mudichu (10) shooting spot (10) sunsinger (10) toptennews (10) adhitya (9) ayutha (9) captainvasthu (9) inthanaal (9) jodiseason6 (9) kalaigar (9) kalakkapovathuyaaru (9) mahabharatham vijay tv serial (9) puthuarthangal (9) vaangapesalam (9) aanmigakathaigal (8) dhinamjothidam (8) krishna (8) masala kudumbam (8) nilavae malare (8) pondatti (8) raja (8) velan (8) atthipookkal (7) bootham (7) captaintvserials (7) karunamanjari (7) maruthani (7) shiradijaisairam (7) soolam (7) then (7) veetukkuveedu (7) Paasa Malar (6) kadhalukku Salam (6) mega (6) moondru mudichu (6) neeya (6) nerpadapesu (6) vamsam (6) 7c (5) captainsports (5) dance (5) marumanam (5) nenjam pesuthe (5) vadivelu (5) accidents (4) doctorx (4) kitchen superstars (4) mozhi (4) namma (4) pongal2014 (4) sunmusichd (4) superkudumbam (4) uravugal sangamam (4) Ganga Yamuna Saraswathi (3) Idhu Kadhala (3) Marakatha Veenai (3) Mayakkam Enna (3) Nandhavanam (3) bairavi (3) goundamani (3) hot news (3) kalyanamaalai (3) kavithai (3) kuttychutties (3) nanbenda (3) robbery (3) sapthanimidangal (3) superdancer (3) tamil pechu engal moochu (3) top10movies (3) vijay tv shows (3) 60seconds (2) Chellakili (2) En Vazhkai (2) Zee tamil (2) asathalarangam (2) beauty (2) cinema360 (2) hairstyles (2) kalaingar (2) keerthanatips (2) mahabharatham (2) old tamil songs (2) polimer (2) puthu (2) raj tv shows (2) sollunganne (2) sundaygalatta (2) tv shiows (2) tv shows vijay tv shows (2) tvnews (2) ungal (2) vazhkaikovilgal (2) Arasiyalla (1) Gama (1) Makkalukkaga (1) Orukaiosai (1) Zee tamil shows (1) agnii (1) amuthamozhigal (1) chinnasanthippu (1) cienma news (1) cinema (1) discovery tamil (1) gossip (1) historyfiles (1) kadupethuraangalord (1) kayitham (1) malli (1) mp3 (1) nijam (1) payanam (1) penn (1) rachaeltips (1) ras (1) saathanaipengal (1) santhanam (1) sareg (1) sathya (1) senthil (1) short (1) sivasankari (1) sports puthiya (1) thenali dharbar (1) tvshows (1) tvv news (1) unarvugal (1) varthagaulagam (1) veppilai (1) vivathameda (1) yog (1)