மும்பை: ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார். அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து நடிக்கிறார். ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பிறகு படங்களில் நடிக்கவில்லை.
பல மாதம் வீட்டிலேயே இருந்தார். பிரசவத்திற்கு பிறகு அவரது உடல் பருத்துவிட்டது.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைத்து வருகிறார். இந்நிலையில் அவர் கடை திறப்பு விழாக்களுக்கு மட்டும் சென்று வருகிறார்.
மீண்டும் நடிக்கும் ஐஸ் பிரசவத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஹேப்பி அனிவர்சரி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் நடிக்கிறார்.
சைஸ் ஜீரோ ஐஸ்வர்யா தூம் 2 படத்தில் சைஸ் ஜீரோவில் வந்தார். தற்போது ஹேப்பி அனிவர்சரியிலும் சைஸ் ஜீரோவில் வருவார் என்று கூறப்படுகிறது.
2014ல் ரிலீஸ் ஹேப்பி அனிவர்சரி படத்தை பிரகலாத் காக்கர் இயக்குகிறார். படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஷூட்டிங் ஹேப்பி அனிவர்சரி படத்தின் பெரும்பாலான காட்சிகள் தென்னாப்பிரிக்காவில் படமாக்கப்படுகிறதாம். ஐஸ் மற்றும் அபி தான் இந்த படத்திற்கு ஏற்ற ஜோடி என்று பிரகலாத் காக்கர் தெரிவித்துள்ளார்.


0 comments:
Post a Comment