பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இரத்த சோகை ஏற்படாமல் இருப்பதோடு, உடலும் நன்கு வலுவுடன் இருக்கும்.
சிலருக்கு இந்த கீரையை கடைந்து சாப்பிட பிடிக்காது. ஆனால் அந்த கீரையை சட்னி போல் செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும்.
மேலும் இந்த பசலைக்கீரை சட்னியானது இட்லி தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த பசலைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை - 10-15 இலைகள்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4
துருவிய தேங்காய் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அத்துடன் பசலைக்கீரையை நீரில் அலசி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களைப் போட்டு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், சுவையான பசலைக்கீரை சட்னி ரெடி!!!


0 comments:
Post a Comment