தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
வெங்காயம் - 1
பூண்டுப்பற்கள் - 2
ஆலிவ் எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
பட்டை இலை - 1
தண்ணீர் - 4 கப்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
• உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் கழுவி, தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2 கப் உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் 2 கப் கேரட் துண்டுகள் தேவை.
• கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயிலை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
• பின்னர் அத்துடன் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட் துண்டுகள் சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
• பின்னர் அதில் 4 கப் தண்ணீரை விட்டு, அத்துடன் பட்டை இலையை சேர்த்து மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
• குக்கரின் சூடு தணிந்ததும், மூடியைத் திறந்து அதிலுள்ள பட்டை இலையை எடுத்து விட்டு, மிக்சி பிளண்டரை உபயோகித்துக் கடைந்து விட்டு, உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


0 comments:
Post a Comment