Wednesday, 18 September 2013

எப்பிடி நம்ம புது லுக்...?



படத்துக்குப் படம் புதுப்புது கதையில் அசத்துகிறார் விஜய் சேதுபதி. இமேஜ் என்கிற விஷயமே இவரிடம் இல்லை. கதை கேட்கும் போது செல்போனுடன் இமேஜையும் ஆஃப் செய்கிற ஒரே இளம் நடிகர் இவராகதான் இருப்பார்.

அறிமுகமான இரண்டாவது படத்தில் லாரி நிறைய ஆட்களை அடிக்க வேண்டும் என்றுதான் நடிகர்கள் துடிக்கிறார்கள். ஒரே இரவில் ஜாக்கிசானையும், அர்னால்டையும் ஓவர்டேக் செய்ய ஆசைப்படுகிறார்கள். விஜய் சேதுபதிக்கு அப்படி எந்த விபரீத ஆசைகளும் இல்லை.
சூது கவ்வும் படத்தில் நடுத்தர வயது மனிதன். போலீஸிடம் செமத்தியாக இருட்டறையில் முரட்டு குத்து வாங்கும் கதாநாயகன். அடுத்து வரவிருக்கும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தாடி மீசையுமா சுமார் மூஞ்சி குமார் என்ற கதாபாத்திரம். பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பரட்டைத்தலை வேலைக்காரர்.

சங்குதேவன் படத்துக்காக கடா மீசையுடன் தற்போது வலம் வருகிறார். இந்த கடா மீசை கெட்டப்பில்தான் துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவிலும் அவர் கலந்து கொண்டார். சங்குதேவனைத் தொடர்ந்து ரம்மி, வன்மம், சீனு ராமசாமியின் பெயரிடாத படம் என விஜய் சேதுபதியின் கால்ஷீட் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஹவுஸ்ஃபுல்.

0 comments:

Post a Comment