உத்தர பிரேதேச மாநிலத்தில் கற்பழிப்பு புகார் அளிக்கவந்த பெண் ஒருவரை காவல் துறையை சேர்ந்த ஒருவர் ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த ஒரு பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புகார் அளிக்க அவர் பெற்றோரோடு காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். நடந்தவற்றை கேட்டறிந்த காவல் துறை அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு அறைக்குள் பூட்டி அவரிடம், புகாரில் தெரிவித்துள்ள படி, நீ பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே உனது ஆடையை கழற்று என வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு பிறகு கற்பழிப்பு புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர் அப்பெண்ணையும், பெற்றோரையும் அடித்து காவல் நிலையத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்துப்போன அப்பெண், காவல் துறை உயர் அதிகாரியிடம் தன்னை கொடுமைப்படுத்திய போலீஸ் மற்றும் கற்பழிப்பு குற்றவாளி மீது புகார் அளித்தார்.
உடனடியாக புகாரை ஏற்றுக்கொண்டு குற்றவாளியை கைது செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:
Post a Comment