Thursday, 19 September 2013

வெங்காயம் விலை மீண்டும் உயரும் அபாயம்



நாட்டின் கையிருப்பில் இருந்த வெங்காயத்தின் 90% அளவிற்கு ஏற்கனவே காலியாகிவிட்டதால் வரும் வாரங்களில் வெங்காயம் விலை உயரும் அபாயம் உள்ளது.

அரசின் கையிருப்பில் தற்போது சுமார் 4 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இது சுமார் 10 நாள் விநியோகத்திற்கு மட்டுமே போதுமானதாகும். இந்நிலையில் வெங்காயம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதுக்கல் காரர்கள் மற்றும் தரகர்கள் ஏராளமான வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதால் செயற்கை பற்றாக்குறை காணப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காய விலையை கட்டுபடுத்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அதிகரிக்குமாறு கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் யோசனை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment