பிரிட்டனில் 12 வயது சிறுவன் ஒருவன் 6 வயது சிறுமியை 2 முறை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றசெயலில் ஈடுபட்ட 12 வயது சிறுவன் பிரிட்டனின் சப்போல்க் அண்ட் நார்போல்க் பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசிக்கின்றான்.
இவன் 2 முறை ஆறு வயது சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தியதாக அவனது பெற்றோரிடம் தெரிவித்தப்போது அதிர்ந்தப்போன அவர்கள், உடனடியாக அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
காவல் நிலையத்தில் சிறுவனை விசாரித்தப்போது, அவன் செய்த தவறுக்காக பெரியளவில் வருத்தப்படவில்லை என்பதை காவல் துறையினர் புரிந்துக்கொண்டனர்.
'அவள் என்ன நினைப்பாள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை' என்று பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து அச்சிறுவன் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி, மிகவும் பயந்து ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அச்சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது அவளது குடும்பத்தை அச்சிறுவன் 12 மாத காலத்துக்கு சந்திக்கக்கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதும் பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு 300 பவுண்ட் மட்டும் நஷ்ட ஈடாக சிறுவனின் பெற்றோர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment