Saturday, 21 September 2013

தாத்தா, மகன் பேரன் நடிக்கும் மனம்!



யாவரும் நலம் படத்துடன் தெலுங்குக்குப் போன இயக்குனர் விக்ரம் கே குமார் மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார்.

மாதவன், நீது சந்திராவை வைத்து விக்ரம் கே குமார் இயக்கிய யாவரும் நலம் அவரின் முதல் படம். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் இந்த ஹாரர் படம் தமிழ் ரசிகர்களை மிரட்டியது. 13பி என்ற பெயரில் இந்தியிலும் படத்தை வெளியிட்டனர்.

அதையடுத்து நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்குவதாக இருந்தார். கதையில் விக்ரம் மூக்கை நுழைத்ததைத் தொடர்ந்து அப்படம் ட்ராப்பானது. விக்ரம் கே குமார் தெலுங்கில் இஸ்க் என்ற படத்தை இயக்கினார். நிதின், நித்யாமேனன் நடித்த அப்படம் சூப்பர்ஹிட்.

இப்போது மனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஆந்திராவே உற்று நோக்குகிறது. காரணம் படத்தில் நடித்திருக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்.

தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா என மூன்று தலைமுறை முதல்முறையாக மனதில் ஒன்றாக நடித்திருக்கிறது. ஹீரோயினாக சமந்தா, ஸ்ரேயா நடித்துள்ளனர். நேற்று, நாகேஸ்வரராவின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு மனம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

மனம் முடிந்ததும் மீண்டும் விக்ரம் கே குமார் தமிழுக்கு வருகிறhர். வி6 டைமென்சன்ஸ் விமல் தயாhpக்கும் படத்தை விக்ரம் கே குமார் இயக்குகிறhர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.

0 comments:

Post a Comment