பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறித்து பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் என்று தி.மு.க எம்.பி. கனிமொழி கூறினார்.
ஆரணி வழியாக போளூருக்குச் சென்ற எம்.பி. கனிமொழிக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான ஆரணியை அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலு தலைமையில் மேளதாளத்துடன் அக்கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ஆரணி விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்திருப்பது அக்கட்சியின் விருப்பம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் நரேந்திர மோடியின் செல்வாக்கு தெரியும்" என்றார்.


0 comments:
Post a Comment