Saturday, 21 September 2013

திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது



ஒரு தேர்தலில் அதிமுகவையும், மறுதேர்தலில் தங்களையும் மக்கள் தேர்வு செய்வார்கள் என்ற எண்ணத்தில் திமுக இருந்து கொண்டிருக்கிறது. அந்த எண்ணம் இனி எக்காலத்திலும் ஈடேறாது என்று பரிதி இளம்வழுதி தனது உரை ஒன்றில் கூறியுள்ளார்.

வேலூர், விருதம்பட்டு பெரியார் திடலில் வெள்ளிக்கிழமை மாலை அண்ணாவின் 105-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பரிதி இளம்வழுதி பேசியது:

பலருடைய நூல்களை நாட்டுடமையாக்கிய கருணாநிதிக்கு, அண்ணாவின் நூல்களை நாட்டுடமையாக்க மனமில்லை.

ஒரு தேர்தலில் அதிமுகவையும், மறுதேர்தலில் தங்களையும் மக்கள் தேர்வு செய்வார்கள் என்ற எண்ணத்தில் திமுக இருந்து கொண்டிருக்கிறது. அந்த எண்ணம் இனி எக்காலத்திலும் ஈடேறாது. மக்களுக்கான இயக்கம் அதிமுக மட்டுமே என்பதை எல்லோரும் உணரத் தொடங்கி விட்டார்கள். அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் ஆட்சியை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வருகிறார்.இதை இப்போதாவது உணர்ந்து திமுகவில் இருப்பவர்கள் அதிமுகவில் இணைய வேண்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இந்தியாவை இந்திராகாந்திக்கு பிறகு...
ஆளக்கூடிய திறமை படைத்தவராக முதல்வர் ஜெயலலிதா உள்ளார் என்பதை வெளிநாட்டு பத்திரிகைகள் எழுதுகின்றன. தமிழகத்தில் என்எல்சி பிரச்னைக்கு எப்படி தீர்வு கண்டாரோ அதேபோன்ற தீர்வுகளை இலங்கை பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, காவிரி பிரச்னை ஆகியவற்றில் காண முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அதனால்தான் அவர் நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் புதுவை உள்பட 40 இடங்களையும் அதிமுக கைப்பற்றுவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் பரிதி இளம்வழுதி.

0 comments:

Post a Comment