லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்த சுட்ட கதை, நளனும் நந்தினியும் படங்களை வேந்தர் மூவிஸ் வாங்கியிருந்தது. ஆனால் படத்தை வெளியிடாமல் மாதங்களை கடத்த, சொந்தமாக படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறார் ரவீந்தர்.
வேந்தர் மூவிஸ் சுட்ட கதை, நளனும் நந்தினியும் படங்களின் விநியோக உரிமையை வாங்கி பல மாதங்களாகிறது. இவ்விரு படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழாவை வெனிஸில் வேந்தர் மூவிஸ் பிரமாண்டமாக நடத்தியது. ஆனால் படத்தை மட்டும் வெளியிடாமல் தாமதப்படுத்தியது.
இந்நிலையில்...
விஜய்யின் தலைவா படத்தை வாங்கியதால் லிப்ரா புரொடக்ஷன்ஸின் இரு படங்களின் வெளியீட்டை மீண்டும் ஒத்திப் போட்டது. தலைவாவும் வெளியாகி தன்னுடைய ஓட்டத்தை முடித்துக் கொண்டது.
ஆனாலும் சுட்ட கதை, நளனும் நந்தினியும் படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடவில்லை. அதற்குப் பதில் விஷாலின் பாண்டிய நாடு படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது.
வேந்தர் மூவிஸ் தனது படத்தை கண்டு கொள்ளாததால் சுட்ட கதை, நளனும் நந்தினியும் படங்களை தானே வெளியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர்.


0 comments:
Post a Comment