ஹரி இயக்கத்தில் விக்ரம் விரைவில் ஒரு படம் நடிக்கிறார்.
என்னுடைய ரசிகர்கள் பொறுமைசாலிகள். என் படம் வர்றவரைக்கும் காத்திருப்பார்கள் என்று சில வருடங்கள் முன்பு பெருமையுடன் கூறினார் விக்ரம். இப்போது அப்படி சொல்வாரா தெரியாது. ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருந்து பார்த்த பீமா, தாண்டவம் என்று எந்தப் படமும் அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. தற்போது ஐ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
என்னதான்....
சிரமப்பட்டு நடித்தாலும் மூன்று வருஷத்துக்கு ஒரு படம் என்றால், விக்ரமா...? ஓ அவரும் நடிக்கிறார்ல என்றுதான் கமெண்ட் வரும். விக்ரமின் நிலைமை கிட்டத்தட்ட அதுதான்.
அந்த தீர்மானப்படி தனக்கு தில், தூள் என்று அடுத்தடுத்து லிப்ட் தந்த தரணியின் படத்தில் நடிக்கிறார் விக்ரம். கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு சென்சேஷனல் ஹிட்டாக அமைந்த சாமி பட இயக்குனர் ஹரிக்கு ஒரு படம் நடித்துத் தரவும் சம்மதித்துள்ளார்.
ஐ க்குப் பிறகு தரணி இயக்கும் படத்தில் அனேகமாக விக்ரம் நடிப்பார் என்கிறார்கள்.


0 comments:
Post a Comment