Saturday, 21 September 2013

சினிமா நூற்றாண்டு விழா: ஜெ. விருது வழங்கினார்



இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சினிமா நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னாள் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்திமாலா ஆகியோரும் குத்து விளக்கேற்றினர். பிறகு சினிமா குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் ஜெயலலிதா உரையாற்றினார்.

திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசிய முதல்வர் ஜெயலலிதா சமூகத்தை நல்வழிப்படுத்துவதே திரைப்படங்களின் நோக்கமாக இருக்க வேண்டும், வன்முறை, ஆபாசம் கூடாது என்றார்.

திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் நினைவுப்பரிசுகளை வழங்கினார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர்., ஏ.வி.எம்.சரவணன், எல்.ஆர்.ஈஸ்வர், கவிஞர் புலமைப்பித்தன், சிவகுமார், ஆர்.பி.சௌத்ரி, மனோரமா, ஜெயசுதா, ஜெயப்ரதா, த்ரிஷா, சிம்ரன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஆகியோர் விருது பெற்றவர்களில் சிலர்.

விழாவில் முதல்வருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment