நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனையடுத்து 150 பேர் கைது செய்யப்பட்டனர். காமராஜர் எல்லா சமுதாயத்துக்கும் பொதுவான தலைவர் என் மரியாதைக்கு உரியவர். அவர் தந்த சத்துணவை சாப்பிட்டுத்தான் ஒடுக்கப்பட்டோர் உயர்ந்த நிலைக்கு வந்தனர். அவரைப் பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று அறிக்கையில் கருணாஸ் குறிப்பிட்டு உள்ளார்.


0 comments:
Post a Comment