இன்று மாலை முதல்வர் குத்து விளக்கேற்றி இந்திய சினிமாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல்நாள் தமிழ் திரைக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதுபோன்ற நிகழ்ச்சிகளின் முதல் மற்றும் முக்கிய டார்கெட், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை. முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டால்தான் ஒளிபரப்பு உரிமைக்கு அதிக பணம் கிடைக்கும், ரசிகர்களும் விரும்பிப் பார்ப்பார்கள்.
பெப்சி தொழிலாளர்கள் சார்பில்...
நடந்த விழாவில் ரஜினிகாந்திடம் கே.பாலசந்தர் கேள்விகள் கேட்க, ரஜினி பதில் சொல்வது போல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதுபோன்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை இன்று ஒழுங்கு செய்துள்ளனர்.
இந்தமுறை கமல், ரஜினி இருவரும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். அவர்களிடம் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் கேள்விகள் கேட்பார்கள். இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்கிறார்.
விஜய், வடிவேலு இருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிகிறது.


0 comments:
Post a Comment